Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஸ்டாலின் கனவு நிறைவேறாது: முதல்வர்

ஏப்ரல் 14, 2019 07:27

சேலம்: சேலத்தில் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் இ.பி.எஸ்., பேசியதாவது, விவசாயத்திற்கு முன்னுரிமை தரும் அரசு அதிமுக அரசு. விவசாயம், விவசாயிகள் செழிக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். 2 ஆண்டுகளில் சேலம் நவீனமான நகரமாக மாறும். காவிரி கோதாவரி இணைப்பு மூலம் வறட்சியான பகுதிகள் செழிக்கும்.  

மத்தியில், நிலையான அரசு அமைய மெகா கூட்டணி அமைத்துள்ளோம். தேர்தலுக்கு பிறகு முதல்வரின் அரசியல் வாழ்க்கை கிழியும் என ஸ்டாலின் கூறுகிறார். 2019 லோக்சபா தேர்தலுக்கு பிறகு தான் எனது அரசியல் வாழ்க்கை துவங்கும். முதல்வர் நாற்காலி என்ற ஸ்டாலினின் கனவு நிறைவேறாது. லோக்சபா மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார். 
 

தலைப்புச்செய்திகள்